வைரஸ் நோய்கள் என்பது வைரசால் ஏற்படும் தொற்று நோய்கள். வைரஸ்கள் மிகவும் சிறிய உயிரணுக்களின் வடிவங்களில் ஒன்று மேலும் இதன் தன்னிச்சையாக உயிர் வாழ முடியாது.
வாழ்க்கையை காக்க ஒரே வழி அது ஒரு உயிர் அணுவை புகுந்து அதன் உட்புற செயல்களை கவர்ந்து கொள்ள வேண்டும். அப்படி தான் வைரஸ் நோய்கள் மனிதர்களிடமும் மிருகங்களிடமும் பரவி வருகிறது.
இந்த பதிவில் வைரஸ் ஏற்படும் நோய்கள் என்னென்ன அவை தாக்கும் பாகத்தை பொறுத்து அதை எத்தனை வகைப்படுத்துகிறார்கள் என்பதை பற்றி விரிவாக பார்க்க போகிறோம்.
முதல் வகையை மூச்சுக் குழாய் தொடர்பான வைரஸ் நோய்கள்.
இந்த வகையான வைரஸ் நோய்கள் மனிதன் மற்றும் பிற விலங்குகளின் சுவாச பாதியான மூச்சுக் குழாயும் மூலம் நோய்க்கிருமிகளை உடலுக்குள் செலுத்தி நோய்களை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டுகளாக,
சாதாரண சளி (Common Cold)
சளி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது; நமக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் சளிக்கு நம்மை பிடிக்கும்.
ஒரு நகைச்சுவைக்காக இந்த வார்த்தைகள் கூறுகிறேன்.ஆனால் உண்மையில் மழை காலம் குளிர்காலம் பணிப்பையும் காலங்களில் மனிதர்களுக்கும் மற்றும் பெற விலங்குகளுக்கும் சளி பிடிக்கும்.
காரணம் ஈரப்பதம் மற்றும் உடல் குளிர்ச்சி காரணமாக உடலின் உள்ள சளி படலம் உடைந்து சளி மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியே வரும்.
இந்த சளியால் அவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படாத போதிலும் மிகப்பெரிய தொல்லையாக மனிதர்களை தாக்குகிறது. இதற்கு எந்தவித ஆங்கில மருந்துகளும் கிடையாது. இயற்கை மருந்து மட்டுமே ஒரே வழி.
ஒருவேளை உங்களுக்கு சளி பிடித்திருந்தால் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. மருத்துவமனைக்கு சென்றாலும் அதற்கான மருந்துகளும் இருக்காது.
சாதாரண சளிக்கு மருந்து கிடையாது இயற்கை வழியாக தைலம் மரத்தின் இலைகளை பறித்து ஆவி பிடிப்பார்கள் மேலும் சிலர் வேறு சில இயற்கை வைத்திய முறைகளையும் கையில் வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் மருத்துவமனைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் உங்களை தாக்கிய சாதாரண சளி ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். அதனால் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
இரண்டாவது தொற்று நோய் இன்புளுயன்சா வைரஸ். இதுவும் மனிதர்கள் அதிகமாக தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.

0 Comments